பதிற்றுப்பத்து - 61. வென்றிச் சிறப்பொடு படுத்து, அவன் கொடைச்
சிறப்புக் கூறுதல்
ADVERTISEMENTS
'பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை தூக்கும் நாடு கெழு பெருவிறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின், சிறியிலை,
ADVERTISEMENTS
புன் கால், உன்னத்துப் பகைவன், எம் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன்; அளிக்க' என,
ADVERTISEMENTS
இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்;
'ஈத்தது இரங்கான்; ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மா வள்ளியன்' என நுவலும் நின்
நல் இசை தர வந்திசினே-ஒளி வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை,
நிலவின் அன்ன வெளி வேல் பாடினி
முழவில் போக்கிய வெளி கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.
துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : புலாஅம் பாசறை